கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் 225 ஆவது கூட்டம் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6:45 மணி அளவில் நேரடி கூட்டமாக வக்ரா சப்வே அருகில் அமைந்துள்ள ஐக்கிய அரங்கில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. செய்வகர் சொ வே: வியாகுல தொம்மை அவர்கள் நிகழ்ச்சியின் நெறிகளை அறிவித்து கூட்டத்தினை தலைமை ஏற்று நடத்திதர மன்றத்தின் தலைவர் சொ வே: இம்திசா ஹசன் அவர்களை அழைப்பு விடுத்தார். சொ வே: இம்திசா ஹசன் அவர்கள் கூட்டத்தினை தலைமை ஏற்று இனிதே துவங்கி வைத்தார். நெறியாளர் சொ வே: எழில் அவர்களை அறிமுகப்படுத்தி நெறியினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். நெறியாளர் எழில் அவர்கள் கூட்டத்தின் நெறியாக நயனம் என்ற தலைப்பில் நாம் அனைவரையும் கண்ணுக்கு மிகவும் அருகில் அழைத்து சென்றுவிட்டார். அவர் கூறிய கண் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் வியப்படைய வைத்தது. இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசான் சொ வே: சகாய மாலா அவர்கள் கண்னோட்டம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தி அனைவரையும் தாங்களில் உரைகளில் பயன்படுத்த கேட்டுக் கொண்டார். கூட்டத்தின் பொது மதிப்பீட்டாளராக சொ வே: மணிகண்டன் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தார்கள்.
திட்டமிட்ட உரைகள்: முதலாவது திட்டமிட்ட உரையை சொ வே: சகாய மாலா அவர்கள் தனது கன்னி பேச்சினை பயணம் என்ற தலைப்பினில் தான் கடந்து வந்த பாதையினை விவரித்தார். இரண்டாவது திட்டமிட்ட உரையினை சொ வே: பஷிர் அகமது அவர்கள் பாதை என்ற தலைப்பில் மிக அழகாக வழங்கினார். மூன்றாவது உரையினை சொ வே: மணிமாறன் அவர்கள் தான் எப்படி ஒருமன்றத்தினை மீள் உருவாக்கம் செய்தார் என்பதனை மிக அருமையாக, மனதை கவரும் வகையில் விவரித்தார்.
உடனடி பேச்சு அங்கம்: சொ வே: அம்துல் ஹாழிர் அவர்கள் உடனடி பேச்சு அங்கத்தினை மிகச் சிறப்பான தலைப்புகளைக் கொண்டு தலைப்பின் பாதகம் மற்றும் சாதகங்களை விவரித்து சொல்லச் சொன்னார், இது மிகவும் மாறுபட்ட வித்தியாசமான உடனடி பேச்சாக அமைந்தது.
பொது மதிப்பீடு: பொது மதிப்பீடு அங்கத்தினை சொ வே: மணிகண்டன் அவர்கள் மிக அருமையாக நிறை குறைகளை கூறி நடத்தி தந்தார்கள். திட்டமிட்ட உரைகளின் மதிப்பீட்டினை சொ வே: ஸ்டீபன், சொ வே: அப்துல் ஹாழிர் மற்றும் சொ வே: மணிகண்டன் ஆகிய மூவரும் மிகச் சிறப்பாக உற்சாகமூட்டும் விதமாக வழங்கினார்கள். மற்ற பொறுப்பாளர்கள் தங்களின் அறிக்கையினை மிகச்சிறப்பான முறையில் வழங்கினார்கள்.
கூட்ட நிறைவு: செவ்வனே நடைபெற்ற கூட்டத்தினை தலைவர் சொ வே: இம்திசா ஹசன் தனது நன்றியுரையுடன் நிறைவு செய்தார்.