கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றத்தின் 226வது கூட்டம் நவம்பர் மாதம் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6:45மணி அளவில் நேரடி கூட்டமாக வக்ரா சப்வே அருகில் அமைந்துள்ள ஐக்கிய அரங்கில் வைத்து மிகச்சிறப்பாக நடைபெற்றது. செய்வகர் சொவே: வியாகுலதொம்மை அவர்கள் நிகழ்ச்சியின் நெறிகளை அறிவித்து கூட்டத்தினை தலைமை ஏற்று நடத்தி தர மன்றத்தின் தலைவர் சொவே: இம்திசாஹசன் அவர்களை அழைப்பு விடுத்தார். சொவே: இம்திசாஹசன் அவர்கள் கூட்டத்தினை தலைமை ஏற்று இனிதே துவங்கி வைத்தார். கூட்டத்தின் நெறியாளராக தானே பொறுப்பேற்று கூட்டத்தின் நெறியாக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தலைப்பில் ஆற்றிய உரை கூட்டு வாழ்க்கையில் நாம் பெரும் மகத்தான சாதனைகளை பட்டியல் காட்டுவதாக அமைந்தது. இன்றைய சொல் மற்றும் இலக்கண ஆசான் சொவே: எழில் அவர்கள் உத்வேகம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தி அனைவரையும் தாங்களில் உரைகளில் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். கூட்டத்தின் பொதுமதிப்பீட்டாளராக சொவே: மணிமாறன் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தார்கள்.

திட்டமிட்டஉரைகள்: முதலாவது திட்டமிட்ட உரையை சொவே: சகாயமாலா அவர்கள் வாய்ப்பு என்ற தலைப்பினில் தான் கடந்து வந்த பாதையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பற்றி விவரித்தார். இரண்டாவது திட்டமிட்ட உரையினை சொவே: பாலாஜி அவர்களும், மூன்றவதாக சொவே: சிவராஜ் அவர்கள் உழைப்பே உயர்வு தரும் என்ற தலைப்பில் மிக அழகாக வழங்கினார். இறுதி உரையினை சொவே: ஸ்டீபன் அவர்கள் தான் முதல் கனவே என்ற தலைப்பில் தான் சொல்வேந்தர் கதையை மிக அருமையாக, மனதை கவரும் வகையில் விவரித்தார்.

உடனடிபேச்சுஅங்கம்: சொவே: வியாகுலதொம்மை அவர்கள் உடனடிபேச்சு அங்கத்தினை திருக்குறள்களையே தலைப்புகளாகக் கொண்டு மாறுபட்ட வித்தியாசமான முறையில் உடனடி பேச்சங்கத்தினை நடத்தினார்.

பொதுமதிப்பீடு: பொது மதிப்பீடு அங்கத்தினை சொவே: மணிமாறன் அவர்கள் மிக அருமையாக நிறை குறைகளை கூறி நடத்தி தந்தார்கள். திட்டமிட்ட உரைகளின் மதிப்பீட்டினை சொவே: பஷீர், சொவே: இம்திஸா சொவே: எழில் மற்றும் சொவே: மணிமாறன் ஆகிய நால்வரும் மிகச்சிறப்பாக உற்சாகமூட்டும் விதமாக வழங்கினார்கள். மற்ற பொறுப்பாளர்கள் தங்களின் அறிக்கையினை மிகச்சிறப்பான முறையில் வழங்கினார்கள்.

கூட்டநிறைவு: செவ்வனே நடைபெற்ற கூட்டத்தினை தலைவர் சொவே: இம்திசாஹசன் தனது முடிவுரையுடன் நிறைவு செய்தார்.